வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

இங்கு இடப்பட்டிருக்கும் கவிதைகள் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருக்கின்றன. இவை உங்களையும் கவரலாம்..! படித்துப் பாருங்களேன்..!

உலகம்

சிரியுங்கள்...
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது...
அழுங்கள்...
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்...
பாடுங்கள்...
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன...
பெருமூச்செறியுங்கள்...
அவைக்
காற்றினில்
காணாமல் போகின்றன...
கொண்டாடுங்கள்...
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்...
கவலைப்படுங்கள்...
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை...
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்...
ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்...
விருந்தளியுங்கள்...
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது...
கையேந்துங்கள்...
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்...
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது...
ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை...
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது...
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது...?
நம்பிக்கை கொள்ளுங்கள்...!
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து!

-புஹாரி-


--------------------------------------------------------------------------------


கோபம்

உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகிநின்று
பரஸ்பரம் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்து
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!

-யாரோ-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக